Posts

Showing posts from June, 2020

01.07.2020

மஞ்சளுக்கு என்று சந்தை அமைந்துள்ள ஊர் எது? ஈரோடு  விளக்கம்: ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இந்த ஊரில் தான் மஞ்சளுக்கு என்று பிரத்யேகமாக சந்தை அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

30.06.2020

"தலையாட்டி பொம்மை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது? தஞ்சாவூர்  விளக்கம்: "தலையாட்டி பொம்மை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "தஞ்சாவூர்" தான். தஞ்சாவூர் மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த ஊர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்த மாநகரமும் இதுவே.

29.06.2020

முட்டை தொழிலுக்கு பெயர் போன ஊர் எது? நாமக்கல்  விளக்கம்: முட்டை தொழிலுக்கு பெயர் போன ஊர் "நாமக்கல்" ஆகும். நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.

28.06.2020

சனீஸ்வர பகவானின் புகழ் பெற்ற கோயில் எங்கு அமைந்து உள்ளது? திருநள்ளாறு விளக்கம்: திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. இந்தக் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

26.06.2020

"பூட்டு, புகையிலை" ஆகிய இவைகள் எந்த ஊரின் அடையாளங்களாகக் கருதப்படுகிறது? திண்டுக்கல் விளக்கம்: "பூட்டு, புகையிலை" ஆகிய இவைகள் "திண்டுக்கல்லின்" அடையாளமாகக் கருதப்படுகிறது. திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது. இந்த ஊருக்கு என்று பெயர் வாங்கி கொடுத்தது பூட்டு மட்டும் அல்ல சுவைமிகுந்த ஜிலேபியும் தான். ஆம்! திண்டுக்கல்லில் "ஜிலேபி" புகழ்பெற்றது என்பது பலர் அறியாதது.

25.06.2020

"ஜமுக்காளம்" எந்த ஊருக்கு அடையாளமாக உள்ளது? பவானி விளக்கம்: பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.  இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

25.06.2020

"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று எந்த ஊரை அழைப்பார்கள்? கோயம்பத்தூர்  விளக்கம்: கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

25.06.2020

பல்லவர் காலத்து இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் எந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது? குடுமியான்மலை  விளக்கம்: குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக் கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது.

25.06.2020

ரோமாபுரி நாணயங்கள் எந்த ஊரில் கிடைத்து உள்ளது? அரிக்கமேடு  விளக்கம்: அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.இந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ரோமாபுரி நாணயங்கள் இந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது.

25.06.2020

"பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது? சிவகாசி  விளக்கம்: "பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "சிவகாசி" தான். சிவகாசி (ஆங்கிலம்:Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

25.06.2020

தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் எந்த ஊரில் அமைந்து உள்ளது? ஸ்ரீ வில்லிப்புத்தூர்  விளக்கம்: தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அமைந்து உள்ளது. இது ஆண்டாள் வாழ்ந்த ஊர் ஆகும்.

find the animals and birds

Image

25.06.2020

"பலாப்பழம்" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது? பண்ருட்டி  விளக்கம்: பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. இங்கு உள்ள மக்கள் ஒரு காலத்தில் பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் பண்ருட்டி என்று பெயர் பெற்றது.

24.06.2020

"மல்லிகை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது? மதுரை  விளக்கம்: "மல்லிகை" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "மதுரை" தான். மதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூ...

23.06.2020

"Gateway of Tamilnadu (தமிழ்நாட்டின் நுழைவாயில்)" என்று அழைக்கப்படும் ஊர் எது? தூத்துக்குடி  விளக்கம்: தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இந்த ஊரை "தமிழ்நாட்டின் நுழைவாயில்" என்றும் அழைப்பார்கள்.

Quiz 22.06.2020

There are only nine questions. They are straight questions with straight answers... 1. Name the one sport in which neither the spectators nor the participants know the score or the leader until the contest ends. 2. What famous North American landmark is constantly moving backward? 3 Of all vegetables, only two can live to produce on their own for several growing seasons. All other vegetables must be replanted every year. What are the only two perennial vegetables? 4. What fruit has its seeds on the outside? 5. In many liquor stores, you can buy pear brandy, with a real pear inside the bottle. The pear is whole and ripe, and the bottle is genuine; it hasn't been cut in any way. How did the pear get inside the bottle? 6. Only three words in standard English begin with the letters ' dw' and they are all common words. Name two of them. 7. There are 14 punctuation marks in English grammar. Can you name at least half of them? 8. Name the only vegetable or fruit t...

22.06.2020

தமிழ் நாட்டில் கால் நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையம் எந்த இடத்தில் அமைந்து உள்ளது? ராணிப்பேட்டை விளக்கம்: தமிழ் நாட்டில் கால் நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையம் ராணிப்பேட்டையில் அமைந்து உள்ளது.