26.06.2020
"பூட்டு, புகையிலை" ஆகிய இவைகள் எந்த ஊரின் அடையாளங்களாகக் கருதப்படுகிறது?
திண்டுக்கல்
விளக்கம்:
"பூட்டு, புகையிலை" ஆகிய இவைகள் "திண்டுக்கல்லின்" அடையாளமாகக் கருதப்படுகிறது. திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். ஹைதர் அலி காலத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது. இந்த ஊருக்கு என்று பெயர் வாங்கி கொடுத்தது பூட்டு மட்டும் அல்ல சுவைமிகுந்த ஜிலேபியும் தான். ஆம்! திண்டுக்கல்லில் "ஜிலேபி" புகழ்பெற்றது என்பது பலர் அறியாதது.
Comments
Post a Comment