Posts

Showing posts from March, 2021

01.04.2021

தெலுங்கு மொழியின் ஆதிகவி என்று கருதப்படுபவர் யார்? நன்னய்யா விளக்கம்:: நன்னய்யா தெலுகு தேசத்தின் ஆதி கவி என்று போற்றப்படுகிறார். இவர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தான் மஹாபாரதத்தை தெலுங்கில் எழுதியவர். தெலுகு இலக்கணத்தை எளிதாக்கும் விதத்தில் 'ஆந்திர சப்த சிந்தாமணி' என்ற நூலையும்  எழுதினார்.

31.03.2021

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் எந்த இடத்தில் அமைந்து உள்ளது? கல்பாக்கம்

30.03.2021

ஒரு சதுர மைல் என்பது எத்தனை ஏக்கர்? 640 ஏக்கர்

29.03.2021

மேக ராகக் குறிஞ்சி என்ற ராகத்தின் புதிய பெயர் என்ன? நீலாம்பரி

28.03.2021

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று யாரை அழைப்பார்கள்? வர்கீஸ் குரியன்

27.03.2021

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் சொந்த மாநிலம் எது? பீகார்

26.03.2021

விழிமின், எழுமின், உழைமின்' என்று கூறியவர் யார்? சுவாமி விவேகானந்தர்

25.03.2021

எழுதப் படிக்கத் தெரியாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளத் தடை விதித்து உள்ள நாடு எது? ஃபின்லாந்து

24.03.2021

கேரள மாநிலத்தின் மாநில விலங்கு எது? யானை

23.03.2021

இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது? தமிழ்

22.03.2021

ஏழைகளின் வெள்ளி' என்று அழைக்கப்படுவது எது? அலுமினியம்

21.03.2021

எந்தத் துறைக்கான நோபல் பரிசு 'நோபல் நினைவுப் பரிசு' என அழைக்கப்படுகிறது? பொருளாதாரம்

20.03.2021

கேரள மாநிலத்தின் மாநில மரம் எது? தென்னை மரம்

19.03.2021

இந்தியா எந்தத் துறையில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்றது? இலக்கியம்

18.03.2021

ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகாடமி எங்கு உள்ளது? ஹைதராபாத் விளக்கம்:: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகாடமி ஹைதிராபாத்தில் அமைந்து உள்ளது.  இது 15.9.1948 இல் உருவானது.

17.03.2021

ஷெர்பா இனத்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? நேபாளம்

16.03.2021

இந்திய தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோகர் சக்கரத்தின் நிறம் என்ன? கடற்படை நீலம்

15.03.2021

அம்புலிமாமா' சிறுவர் பத்திரிகை, தமிழில் முதன் முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது? 1947 விளக்கம்:: அம்புலிமாமா பரவலாக வாசிக்கப்படும் சிறுவர் இதழ் ஆகும். இது ஜூலை 1947 ஆம் ஆண்டு பி.நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்துப் பலநிறப் படங்களோடு சொல்வது அம்புலிமாமாவின் சிறப்பு.  இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் வெளிவருகின்றது. கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு 1998 வரை வந்தது. அம்புலிமாமா ஜூலை 1947 ஆம் ஆண்டு பி. நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோரால் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்பு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளிவந்தது. சிறுவர்களுக்கு நல் ஒழுக்கத்தையும் பண்புகளையும் ஊட்டுவதே அம்புலிமாமாவின் குறிக்கோள்.

14.03.2021

வாய் துர்நாற்றத்தை போக்குவதில் முதலிடம் வகிக்கும் பழம் எது? ஆப்பிள்

13.03.2021

இது மண்ணுலகின் சொர்க்கம்' என்ற வாசகம் எந்த உலக அதிசயத்தில் காணப்படுகிறது? தாஜ்மஹால்

12.03.2021

13 மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்த இந்தியப் பிரதமர் யார்? திரு. பி.வி. நரசிம்மராவ்

11.03.2021

அரசுத் துறைக் கம்பெனிகள் அதிகம் உள்ள மாநிலம் எது? உத்திரப் பிரதேசம்

10.03.2021

இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியப்பட்டா எங்கு உருவாக்கப்பட்டது? பெங்களூர் விளக்கம்:: ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது.  பூமியின் காற்று மண்டலத்தில் இது பிப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது. இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா பெங்களூரில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

09.03.2021

பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஞானியான கபீர்தாஸரின் குரு யார்? சுவாமி ராமானந்தர் விளக்கம்:: கபீர் என்பவர் இந்தியாவின் ஒரு மதகுருவும் புனிதரும் ஆவார். இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்து-முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார்.  “உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது” என்ற கருத்தை உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார்.  காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.இராமானந்தரின் சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை தோஹே என்றழைக்கப்படுகிறது. 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது.  இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான சந்த் கபீர் விருது வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிர்தேசத்தில் சந்த் கபீர் எனும் மாவட்டமும் உள்ளது. மேலும் கபீரின் நினைவை போற்றும் விதமாக, 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு கபீரின் உருவ அஞ்சல் தலை வெளியிட்டது.

08.03.2021

ஜியோமெட்ரியின் தந்தை' எனப்படும் யூக்ளிட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? கிரீஸ் விளக்கம்:: கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த யூக்ளிடு அல்லது யூக்கிளிடீசு என்பார் கி.மு. 325 முதல் கி. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவவியல் நூலாகிய எலிமென்ட்ஃசு (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன.  இவருடைய வடிவவியல் நூலின் வழி முதற்கோளாக (axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய எலிமென்ட்ஃசு என்னும் நூலில் வடிவவியல் மட்டும் இன்றி எண்கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10ல் 20ஆவது முன் வைப்பில் பகா எண்கள், எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார்.  வடிவயியலில் ஒரு பிரிவு யூக்ளீட் வடிவியல் என்று வழங்கப்படுகிறது.

07.03.2021

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிய ஒருவர் கண்டிப்பாக எத்தனை அடி உயரம் இருக்க வேண்டும்? ஆறு அடி விளக்கம்:: ராஷ்டிரபதி பவன், புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவுப் பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் உள்ளன.1911 இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது.  இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929 இல் திறக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிய ஒருவர் கண்டிப்பாக ஆறு அடி உயரம் இருக்க வேண்டும் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல் ஆகும்.

06.03.2021

அனைத்து கிராமங்களிலும் பொதுத் தொலைபேசி வசதி பெற்ற முதல் இந்திய மாநிலம் எது? கேரளா

05.03.2021

உலக வனவிலங்குப் பாதுகாப்புக் கழகத்தின் சின்னத்தில் இடம் பெற்று உள்ள விலங்கு எது? பாண்டா கரடி

04.03.2021

அமெரிக்காவின் மிகச் சிறந்த கல்வியாளர் விருதை இரண்டு முறை பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்? திரு. எம். எஸ். உதயமூர்த்தி

03.03.2021

கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை எந்த மாநிலத்தில் உள்ளது? பஞ்சாப்

02.03.2021

ஊலாஜி என்பது எதைப் பற்றிய அறிவியல் படிப்பு? முட்டை

01.03.2021

ஆந்திராவில் இலட்சம் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி அளித்த முதல் மனிதர் யார்? சாந்தா சின்கா விளக்கம்:: சாந்தா சின்கா என்பவர் ஒரு சமூக சேவகி. 2003 இல் இதற்காக அவர் மகசேசே விருது பெற்றார். இவர் எம். ஏ பட்டம் பெற்றவர்.  MV Foundation ஐ உருவாக்கியவர். இது இன்று அனேக குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து உதவும் வகையில் அமைந்து உள்ளது.