Posts

Showing posts from September, 2020

01.10.2020

முதன் முதலில் கேள்விக் குறி எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது? லத்தீன் விளக்கம்:: முதன் முதலில் கேள்விக் குறி லத்தீன் மொழியில் தான் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னரே மற்ற மொழிக் கலாச்சாரத்துடன் இணைந்தது.

30.09.2020

இந்தியாவின் நீளமான கோயில் பிரகாரம் எது? இராமேஸ்வரம் கோயில் பிரகாரம் விளக்கம்:: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.  இந்தக் கோவிலில் உள்ள பிரகாரம் தான் இந்தியாவிலேயே வைத்து நீளமான கோயில் பிரகாரம் ஆகும். இது 14,000 அடி நீளம் கொண்டது.

29.09.2020

கனடாவின் தேசியப் பறவை எது? வாத்து விளக்கம்:: கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. இதன் தேசியப் பறவை வாத்தாகும்.

28.09.2020

தார் சாலை முதன் முதலில் இந்தியாவில் எங்கு போடப்பட்டது? கல்கத்தா விளக்கம்:: இந்தியாவில் முதன் முதலில் தார் சாலை கல்கத்தாவில் தான் போடப்பட்டது. இது 1825 இல் போடப்பட்டது.

27.09.2020

பைசா நகரக் கோபுரத்தில் எத்தனை மாடிகள் உள்ளது? எட்டு மாடிகள் விளக்கம்:: பைசா நகரக் கோபுரத்தில் எட்டு மாடிகள் உள்ளது அந்த மாடிகளை அடைய 300 படிகள் காணப்படுகிறது. இந்த சாய்ந்த கோபுரம் தான் உலகத்தின் ஏழு அதிசயங்களுள் ஒன்று.

26.09.2020

முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் எடை எவ்வளவு? 180 கிராம் விளக்கம்:: முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் எடை 180 கிராம் ஆகும். இதில் 165 கிராம் வெள்ளியும், மற்ற உலோகங்கள் 15 கிராமும் இருந்தன.

25.09.2020

மீன் பிடிக்கும் துறையில் உலகில் சிறந்து விளங்கும் நாடு எது? ஜப்பான் விளக்கம்:: மீன் பிடிப்பதில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி மீன் பிடிக்கும் துறையில் இன்று வரையில் ஜப்பானே சிறந்து விளங்கி வருகிறது.

24.09.2020

எந்த நாட்டினர் தங்கள் நாட்டை தகப்பன் நாடு என்று அழைப்பார்கள்? ஜெர்மனி விளக்கம்:: ஜெர்மனி நாட்டினர் மட்டும் தங்களது நாட்டை தகப்பன் நாடு என்று தான் சொல்வார்களே தவிர தாய் நாடு என்று சொல்லமாட்டார்கள்.

23.09.2020

அன்னாசிப் பழத்தின் பூர்வீகம் எது? தென் அமெரிக்கா விளக்கம்:: அன்னாசிப் பழம் நார்சத்து மிக்கது. இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.

22.09.2020

சமணர்களின் புனித மரம் எது? அசோக மரம் விளக்கம்:: சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் ‘சிரமணர்’, தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். இவர்களின் புனித மரம் அசோக மரம் ஆகும்.

21.09.2020

இந்தியாவில் கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் எது? தமிழ்நாடு விளக்கம்:: இந்தியாவில் கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான்.

20.09.2020

உடலில் அதிக அளவில் தண்ணீர் திசுக்கள் அடங்கிய பகுதி எது? மூளைப் பகுதி விளக்கம்:: நமது மூளையில் 70 முதல் 80% திசுக்கள் தண்ணீர் கொண்டதுதான்.

19.09.2020

இந்தியாவில் தேர்தலுக்கான மை தயாரிக்கும் இடம் எது? மைசூர் விளக்கம்:: உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு தேர்தல் மை அடையாள மையாக வைக்கப்படுகிறது. அந்தத் தேர்தல் மை மைசூர் இல் தான் தயாரிக்கப்படுகிறது.

18.09.2020

கல்கத்தா- டெல்லி நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட வருடம் எது? 1850 விளக்கம்:: நெடுஞ்சாலை (Highway) என்பது பொதுவாக பொதுமக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும். அந்த வகையில் கல்கத்தா- டெல்லி நெடுஞ்சாலை தான் அந்த இரு நகரங்களையும் இணைக்கின்றன. இது 1850 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

17.09.2020

செல்போனை முதன் முதலில் தயாரித்த நிறுவனம் எது? மோட்டோரோலா விளக்கம்:: மோட்டோரோலா தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இது கம்பியில்லாத தொலைபேசி கையிணைப்புகளை உற்பத்தி செய்கிறது. இதுவே முதன் முதலில் செல்போனை தயாரித்த நிறுவனம் ஆகும்.

16.09.2020

டான்யூப் நதி எந்த கண்டத்தில் பாய்கிறது? ஐரோப்பா விளக்கம்:: தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் வளைந்து வளைந்து ஓடுகிறது டான்யூப் நதி. ஜெர்மனியின் இருண்ட காடுகளில் உற்பத்தியாகி, ஒன்பது நாடுகளைக்கடந்து, 2680 கிலோ மீட்டர் ஓடி, பிளாக் சீ எனப்படும் கருங்கடலில் போய்க் கலக்கிறது.

15.09.2020

இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம் விளக்கம்:: ஆலமரம் நல்ல நிழல் தரும்.இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர். ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்.இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

14.09.2020

நமது நாட்டின் தேசியக் கனி எது? மாங்கனி விளக்கம்:: மாங்கனி முக்கனிகளில் ஒன்று. மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் என்பது பழமொழி.

13.09.2020

1972 வரையில் இந்தியாவின் தேசிய விலங்காக எது இருந்தது? சிங்கம் விளக்கம்:: 1972 வரையில் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

12.09.2020

"வந்தே மாதரம்" பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்? அரவிந்த கோஷ் விளக்கம்:: ஸ்ரீ அரவிந்தர் (Sri Aurobindo, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர். ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார்.

12.09.2020

இந்திய தேசியக் கொடியின் நீளம் அகலம் எந்த விகிதத்தில் இருக்க வேண்டும்? 3:2 விளக்கம்:: நமது தேசியக் கொடி 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

11.09.2020

உப்புத் தேன் எந்த நாட்டில் கிடைக்கும்? பிரேசில் விளக்கம்:: பிரேசில் நாட்டில் கோயாஸ் மாநிலத்தில் காணப்படும் தேன் உப்பாக இருக்கும்.

10.09.2020

உலகின் முதல் திரைப்பட பெண் இசை அமைப்பாளர் யார்? ஜாடன் பாய் விளக்கம்:: இவரது முழு பெயர் ஜாடன் பாய் ஹுசைன். இவர் ஒரு இந்தியர். 1892 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

09.09.2020

பிரான்சில் பெண்களுக்கு ஓட்டுரிமை எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது? 1946 இல் விளக்கம்:: முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்த நாடு சுவீடன் தான்.

08.09.2020

பிரான்சில் பெண்களுக்கு ஓட்டுரிமை எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது? 1946 இல் விளக்கம்:: முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்த நாடு சுவீடன் தான்.

07.09.2020

சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியப் படத்தின் பெயர் என்ன? மாயா பஜார் விளக்கம்:: மாயா பஜார் என்ற படம் தான் சுவரொட்டி மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். இதனை 1923 இல் பாபுராவ் என்பவர் தயாரித்தார்.

06.09.2020

ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது? கழுகு விளக்கம்:: ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ளது போன்றே ஏராளமான மலைகளைக் கொண்ட நாடு  ஸ்பெயின். இது அட்லாண்டிக் கடலையும், மத்திய தரைக்கடலையும் பிரிக்கிறது.

05.09.2020

பதஞ்சலி முனிவரை எதன் தந்தை என்று அழைப்பர்? யோகா விளக்கம்:: பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. Congrats Saranya