Posts

Showing posts from August, 2021

02.09.2021

முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்த தமிழர் யார்? பூலித்தேவன்

01.09.2021

தமிழகத்தில் காடுகள் குறைவாக இருக்கும் மாவட்டம் எது? திருவாரூர்

31.08.2021

மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் எந்த நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது? ஜப்பான்

30.08.2021

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று அழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் என்ன? மியான்மர்

29.08.2021

தமிழக அரசின் மாநிலச் சின்னம் யாருடைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டது? திரு. குமாரசாமி ராஜா

28.08.2021

தமிழ் நாட்டின் பழமையானதும் மிகப் பெரிதுமான சர்க்கரை ஆலை எந்த இடத்தில் அமைந்து உள்ளது? நெல்லிக் குப்பம்

27.08.2021

தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை எந்த இடத்தில் அமைந்து உள்ளது? திருச்சி விளக்கம்:: ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது.  இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது. தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை திருச்சியில் அமைந்து உள்ளது.

26.08.2021

முல்லை நில மக்களின் முக்கியத் தொழில் எது? பால் பண்ணை விளக்கம்:: நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.  இதில் முல்லை நில மக்களின் முக்கியத் தொழில் பால் பண்ணை வைத்தல் ஆகும்.

25.08.2021

தமிழ்நாட்டில் முதன் முதலில் எங்கு நகராட்சி செயல்படத் துவங்கியது? வாலாஜா பேட்டை விளக்கம்:: நகராட்சி (Municipality) ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.  தமிழ்நாட்டில் முதன் முதலில் வாலாஜா பேட்டையில் தான் நகராட்சி செயற்படத் துவங்கியது. இது வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

24.08.2021

சிவகங்கைச் சிங்கம்' என்று அழைக்கப்பட்டவர் யார்? சின்ன மருது விளக்கம்:: மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.  'சிவகங்கைச் சிங்கம்' என்று சின்ன மருதை அழைப்பார்கள்ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.

23.08.2021

சோழர்களின் ஏரி' என்று அழைக்கப்படுவது எது? வங்காள விரிகுடா

22.08.2021

நில அளவை முறையை அறிமுகப்படுத்திய சோழ மன்னன் யார்? ராஜ ராஜ சோழன்

21.08.2021

நீதிக் கட்சியின் பழைய பெயர் என்ன? தென் இந்திய விடுதலைச் சங்கம்

20.08.2021

நீலன் என்று பெயர் பெற்ற ஆழ்வார் யார்? பெரியாழ்வார்

19.08.2021

இந்திய வரலாற்றில் ஆற்காடு வீரர் என்று யாரை அழைப்பார்கள்? இராபர்ட் கிளைவ்

18.08.2021

சரஸ்வதி மஹால் நூலகத்தை தோற்றுவித்தவர் யார்? இரண்டாம் சரபோஜி

17.08.2021

திருக்குறள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட அயல் நாட்டு மொழி எது? இலத்தீன் விளக்கம்:: திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.1 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.  திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.  திருக்குறள் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட அயல் நாட்டு மொழி லத்தீன் தான்..

16.08.2021

அமராவதி அணை அமைந்து உள்ள மாவட்டம் எது? திருப்பூர் விளக்கம்:: அமராவதி அணை இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதிநகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மை) தொலைவில் உள்ளது. அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது.  இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் (Mugger Crocodile) பண்ணை உள்ளது. பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது.

15.08.2021

'முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்' எங்கு அமைந்து உள்ளது? நீலகிரி

14.08.2021

'இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா' எங்கு அமைந்து உள்ளது? பொள்ளாச்சி

13.08.2021

'முதுமலை தேசியப் பூங்கா' எங்கு அமைந்து உள்ளது? நீலகிரி

12.08.2021

'மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்' ஆகிய இந்தத் தொழில்கள் யாவும் எவ்வகை நிலத்துடன் தொடர்பு உடையவை? நெய்தல்

11.08.2021

கடலும் கடல் சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெய்தல்

10.08.2021

'சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்' மேற்கண்ட இந்தத் தொழில்கள் யாவும் எவ்வகை நிலத்தின் தொடர்புடையவை? முல்லை

09.08.2021

'வரகு, சாமை' இந்த இரு தானியங்களும் எவ்வகை நிலத்துடன் தொடர்பு உடையது? முல்லை

08.08.2021

'இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்' இவர்கள் அனைவரும் தமிழரின் ஐவகை நிலத்தில் எவ்வகை நிலத்தை சேர்ந்தவர்கள்? முல்லை

07.08.2021

'காடும் காடு சார்ந்த நிலமும்' எவ்வாறு அழைக்கபப்டுகிறது? முல்லை

06.08.2021

முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் பண்டை தமிழரால் எவ்வகை நிலமாக குறிக்கப்படுகிறது? பாலை

05.08.2021

'குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,கானவர்' இவர்கள் அனைவரும் ஐவகை நிலத்தில் எவ்வகை நிலத்தை சேர்ந்தவர்கள்? குறிஞ்சி

04.08.2021

மலையும் மலை சார்ந்த நிலமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குறிஞ்சி

03.08.2021

'வாலாஜா ஏரி' எந்த மாவட்டத்தில் அமைந்து உள்ளது? கடலூர் மாவட்டம் விளக்கம்:: வாலாஜா ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும்.இதன் பரப்பளவு 1,664 ஏக்கர். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 11,362 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.

02.08.2021

'வெலிங்டன் ஏரி' எந்த மாவட்டத்தில் அமைந்து உள்ளது? கடலூர் மாவட்டம்