07.03.2021
இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிய ஒருவர் கண்டிப்பாக எத்தனை அடி உயரம் இருக்க வேண்டும்?
ஆறு அடி
விளக்கம்::
ராஷ்டிரபதி பவன், புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவுப் பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் உள்ளன.1911 இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது.
இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929 இல் திறக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணிபுரிய ஒருவர் கண்டிப்பாக ஆறு அடி உயரம் இருக்க வேண்டும் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல் ஆகும்.
Comments
Post a Comment